இன்றைய உலகில் சர்வ சக்தி வாய்ந்த நடிகர் ஜாக்கிசான், உலகின் பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர், அதனை விட நல்ல மனிதர் என்ற பெயர் உண்டு. நடிகர்களில் இனி ஒருவன் அவர் அளவு சம்பாதிப்பதிப்பென்பது 50 ஆண்டுகள் கழித்து கூட கனவிலும் நடக்காதது.
ஆனால் சோகமான புத்திரபாக்கியம்.
தவறான சேர்க்கையினால் அவன் போதை பழக்கத்தில் சிக்கிவிட சீன அரசு அவன்மேல் நடவடிகை எடுத்தது, அவர் நினைத்திருந்தால் அதனை வேறுமாதிரி அரசியல் செய்து சீன அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, என் மகன் குற்றமற்றவன் என பெரும் பிரளயம் செய்திருக்கலாம், உலக நாடுகளே ஓடி வந்திருக்கும்.
ஆனால் அவர் என்ன செய்தார்?
“இந்நாட்டிற்கு நல்ல குடிமகனை தராத என்னை மன்னித்துவிடுங்கள், அவனை நல்ல சீன குடிமகனாக வளர்க்க நான் தவறிவிட்டேன்” என மன்னிப்பு கேட்டு தன் சொத்துக்களில் பெரும்பாலவவற்றை அனாதை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டார்.
“என் மகன் தான் உருப்படவில்லை, இன்னொரு நல்ல சீன குடிமகன் உருவாகட்டும்..”
அவரையும் , அற்புதம்மாளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
நாட்டுபற்று என்றால் என்ன என்பது தெரியும், சாதாரண போதை வழக்கிற்கும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்பவர் அவர், தன் மகனின் தேசவிரோத கும்பல் தொடர்பு தெரிந்தும் இன்னமும் குற்றமற்றவன் என சொல்லிகொண்டிருப்பவர் இவர்.
ஜாக்கிசானின் உறவினர்கள் கூட ஒன்றும் சொல்லவில்லை ஆமோதித்தார்கள், ஆனால் அற்புதம்மாள் பின்னால் செல்பவர்களின் அழிச்சாட்டியம் தாளவில்லை, இப்போது சின்ன சாந்தன் எனும் அந்நிய நாட்டு தாயினை சேர்த்துகொண்டார்கள்.
ஏன் ராம்குமாரின் தாய் தமிழச்சிதானே, எவனாவது பேசினானா? இவ்வளவிற்கும் தமிழக தமிழச்சி. இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது
சல்யூட் ஜாக்கிசான், இப்படி குடிமக்கள் இருந்த பின் சீனா ஏன் வல்லரசாக உலகை மிரட்டாது?