சரக்கு மற்றும் சேவை வரி : Goods & Services Tax)

No automatic alt text available.

ஜிஎஸ்டி (Goods & Services Tax) என்பது ஒரு வரி சீர்திருத்தம், பலவிதமான வரிகளுக்கு பதிலாக ஒரே வரியில் போட்டு சாத்திவிடலாம்

வசூலிப்பது எளிது, கணக்கு பார்பபது இன்னும் எளிது, பல வகை வரிகளை போட்டு குழப்புவதற்கு பதில் ஒரே வரி.

இப்போது இருக்கும் விற்பனை வரி (Sales Tax) சேவை வரி (Service Tax), இன்ன பிற வரிகளுக்கு பதிலாக ஒரே வரி – பொருள் சேவை வரி.

இது எல்லா நாடுகளிலும் இருக்கும் முறையே, அவர்கள் என்றோ எப்பொழுதோ அமல்படுத்திவிட்டு வசூலித்து கொண்டிருக்கின்றார்கள், நாம் இப்பொழுதுதான் அந்த பக்கம் வந்திருக்கின்றோம்

பொதுவாக உணவு, மருந்து, எரிபொருள் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்கு உண்டு. உணவு என்றால் உணவுபொருட்களுக்கு மாறாக உணவகத்தில் உண்ணும் பில்லுக்கு அல்ல‌

செய்யவேண்டிய வேலைதான், ஆனால் இந்தியாவில் எதுவும் எளிதில் சாத்தியமில்லை. கையில் கிடைத்ததை எல்லாம் அரசியலாக்கும் தேசமிது, தேசநலன் என்பதை விட இதனை பிரச்சினை ஆக்கிவிட முடியாதா?, நாமும் ஒரு கூட்டத்தை கூட்டிவிட முடியாதா என சிந்திப்பவகள் அதிகம்

சில சிக்கலும் உண்டு, உதாரணம் 7% ஜிஎஸ்டி அரசு அறிவிக்கின்றது என்றால் 1000 ரூபாய் பொருள் வாங்கினால் 70 ரூபாய் வரி, மொத்தம் 1070 ஆகும்.

இதே 10000 ரூபாய் பொருள் வாங்கினால் வரி 700, விலை 10700 ஆகும், அப்படியானால் 5 லட்சம் கார், 7 லட்சம் நகைக்கெல்லாம் என்ன மொத்தவிலை வரும் என கணக்கிட்டுகொளுங்கள், இது ஒரு வகை சிக்கல்.

இன்னும் இந்திய அரசு எத்தனை சதவீத ஜிஎஸ்டி விதிக்கபோன்றது என தெரியவில்லை.

இன்னொன்று இதனை உற்பத்தி நிலையங்களுக்கும் விதிக்கவேண்டும், அப்பொழுது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அலறி அடித்துகொண்டு ஓடும் அபாயம் உண்டு.

சில விலைவாசிகள் உயரலாம், ஆனால் சில வரிகள் தளர்த்தபடுவதால் சில விஷயங்கள் விலை குறைய வாய்ப்பும் உண்டு

இந்த பெரும் தேசமான இந்தியாவில் இதனை அமல்படுத்த காங்கிரஸ் கட்சிதான் திட்டம் தீட்டியது, இந்த அரசு அதனை கொண்டுவந்துவிடும் உத்வேகத்தில் இருக்கின்றது

ஆனால் மாநிலங்களுக்கும் சில உரிமைகள் இத்தேசத்தில் உண்டல்லவா?, அவைகளில் சில மல்லுக்கு நிற்கின்றன. தங்கள் வரி வசூல் பாதிக்கபடலாம் என அவை அஞ்சுகின்றன, ஆனால் தேசம் முக்கியமல்லவா? நிச்சயம் செயல்படுத்தும் மத்திய அரசு

இது நிச்சயம் முறையான வரிவசூலுக்கு உதவி செய்யும் திட்டம்தான்

அரசு ஜிஎஸ்டி நிறைவேற்றியே தீரவேண்டும், காரணம் தேசத்தின் முதுகெலும்பான வரி வசூலுக்கு அது மகா அவசியம்

உண்மையில் நமது நாட்டில் வரி குறைவு, யாரோ ஒரு அதிமுக காரர், அமெரிக்காவில் ஜிஎஸ்டி இல்லை என்றாராம். அவர் அமெரிக்காவினை மேப்பில் பார்த்திருக்கின்றாரா அல்லது நிலவின் பின்புறம் இருப்பதாக நம்பிகொண்டிருக்கின்றாரா என தெரியவில்லை

அங்கு வரியே வருமானத்தில் 3ல் ஒரு பங்கு எனும் அளவிற்கு கடும் வசூலிப்பு, அவர்கள் என்று அல்ல எல்லா வளர்ந்த நாடுகளிலும் அதுதான் நிலை, மிக கடுமையான வரிகள், காரணம் அப்பொழுதுதான் ஒரு தேசம் தடையின்றி இயங்க முடியும்

ஏராளமான நாடுகளில் ஒருவர் வருமான வரி பாக்கி வைத்திருந்தாலே பாஸ்போர்ட் முடக்கபடும்

இந்நாட்டிற்கு தேவையான திட்டம்தான், ஆனால் புரியாத மக்கள் இவர்கள். மோடி அம்பானிக்காக ஜிஎஸ்டி கொண்டுவந்துவிட்டார் என சொன்னால்போதும், ஜிஎஸ்டி பெயர் வரும் பில்லினை பார்க்கும்பொழுதெல்லாம் அவரை திட்டி தீர்ப்பார்கள்

உண்மையில் சிதம்பரம் இருந்தாலும் இதனையேதான் கொண்டு வருவார்.

அரசு கொண்டு வரட்டும், புரியாதவர்கள் வழக்கம் போல சொல்லிகொண்டிருக்கட்டும், ஊர்வலம் செல்லட்டும்

ஆனால் இது காலமாற்றம், காலத்தில் செய்யவேண்டிய மாற்றம்

அதுவும் ஒரு வளரும் தேசத்தில் இது மகா அவசியம்

முதலில் கடும் குழப்பம் வரும், வரி கணக்கில் குழம்புவோம், கொஞ்சம் விலைவாசி கூடத்தான் செய்யும், இருக்கட்டும். கச்சா எண்ணெய் சரிந்த இந்நிலையில் இதனை செய்யலாம்

நமது நாட்டுக்காக சில சுமைகளை கூட சுமப்பதில் என்ன கஷ்டம் வந்துவிடும், சுமப்போம். கொஞ்சநாளில் எல்லாம் சரியாகிவிடும், சில வரிகள் குறைவதால் பெரும் பாதிப்பு இருக்காது.

ஆனால் வசூல் என்றால் எல்லாவற்றிலும் செய்யவேண்டும் அல்லவா?

இதோ கபாலி படம் பலநூறுகோடி வசூல் என தயாரிப்பாளர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார், ஆனால் அரசு வரி வசூலிக்க முடியுமா? முடியாது. வரி விலக்கு. இந்த தேசத்திற்கு பெரும் சேவை செய்து பொருளாதாரத்தை மாற்றிய விஷயமல்லவா அதனால் வரிவிலக்கு.

இந்த கபாலியில் மட்டும் எத்தனை கோடிகள் வரியாக அரசுக்கு கிடைத்திருக்கும்?

அறகட்டளைக்கு விலக்கு, கட்சி நிதிகளுக்கு விலக்கு, சினிமாவிற்கு விலக்கு என இந்த விலக்குகளை முதலில் விலக்கவேண்டும், வரி கட்டினால் என்ன?

இதற்கும் ஒரு முடிவு கட்டிவிட்டு ஜிஎஸ்டி கொண்டு வருதல் நலம். இந்த சினிமாகாரர்களுக்கு எதற்கு வரிவிலக்கு?

இதனை கேட்க வேண்டிய எம்பிக்கள், அம்மா பெயரில் ரயில் வேண்டும், அம்மாவிற்கு பாரதா ரத்னா வேண்டும் என இம்சை ஒருபுறம்

இன்னொரு புறம் “ஆத்தா என்ன அடிச்சிட்டா………” என ஒப்பாரி ஒருபுறம்

இந்த இம்சைகளை விடுங்கள்

ஜிஎஸ்டி எத்தனை சதவீதம், அதற்கு எதெல்லாம் விலக்கு என பார்க்கலாம், வேண்டுமானால் பாருங்கள் பெட்ரோல் மருந்து போல டாஸ்மாக் சரக்கிற்கு எளிதில் விதிக்கமாட்டார்கள்

அதுவும் இன்று எரிபொருள் போல அத்தியாவாசிய பொருளாகிவிட்டது.

பின்னூட்டமொன்றை இடுக