வதந்தி பரப்பியவர்கள் கைது.. தமிழச்சி எப்போது?

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் கைது, இன்னும் பலர்மேல் நடவடிக்கை

நிச்சயம் செய்யவேண்டிய விஷயம், காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.

இல்லாவிட்டால் இருந்த இடத்தில் இருந்துகொண்டு பாரத வியாசராக எல்லாவற்றையும் மனக்கண்ணாடியில் பார்ப்பது போல அப்பல்லோவில் அப்படி , இப்படி என சொல்லிகொண்டே இருப்பார்கள்.

ஆனால் எல்லோர் மேலும் சட்டம் பாயவேண்டும் அல்லவா?

ஒரு ராஜ்யசபா எம்பி பகிரங்கமாக என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றார், பதற்றமான இந்த நேரத்தில் அதன் விளைவுகள் எப்படி ஆயினும் வெடிக்கலாம், தமிழகத்தில் அது ஒருவித கொதிநிலையினை உருவக்கலாம்

அவர் மீது என்ன நடவடிக்கை என யார் கேட்பார்கள்? கேட்கமாட்டார்கள், கேட்டாலும் கிடைக்காது.

அது ஒருபுறம் இருக்கட்டும்

சர்ச்சைகளின் மகாராணி தமிழச்சி என்பவர், பிரான்சில் இருந்து கொண்டு என்னவெல்லாமோ பேசுகின்றார். அவர் பாண்டிச்சேரிகாரர் என்பதும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரிகின்றது

அவர் ஏற்கனேவே இந்திய அமைதியினை விரும்புவர் அல்ல, இப்பொழுது மாநில அமைதியினையும் குறைப்பது போல பேசிகொண்டிருக்கின்றார், உச்சமாக இந்திய சட்டம் என் மயிரை பிடுங்குமா? என கேட்பதெல்லாம் பெரும் மிரட்டல்

ஆக அவர்களை எல்லாம் என்ன செய்ய போகின்றார்கள்? அவர்களை போன்றவர்களை அடக்கினால், தேசிய கொடியினை எரித்துவிட்டு பெரும் தேச தியாகிபோல டிவியில் பேசிகொண்டிருப்பவனை எல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டால் இந்நிலை ஏன் வருகின்றது

எனவே யார் இம்மாதிரி ஆபத்தான வழிகளில், மாநில அமைதியினை குலைக்கும் வழிகளில் பேசிவிட்டு, எங்களை என்ன செய்ய முடியும்? என சவால் விட்டு அலைவதுதான் இம்மாதிரியான விஷயங்களுக்கு மூலகாரணம்

அவர்களை கட்டுபடுத்தவேண்டியது காவல்துறை பொறுப்பு, அவர்கள் கடமையினை அவர்கள் செய்யட்டும்

முதல்வர் நலம்பெற்று வர நாம் தொடர்ந்து பிரார்திப்போம், சமூக அமைதியும், அமைதியான சூழலும் தமிழகத்தில் தொடரட்டும்.


அப்பல்லோவிற்கு திரைதுறையினர் விஜயம் சில நடிகர்கள் முதல் பெரும் இயக்குநர்கள் வரை வந்தனர்

எப்படியும் முதல்வரை பார்க்கமுடியாது என தெரியும், அவர் இருக்கும் அறைபக்கம் கூட செல்லமுடியாது என தெரிந்தும் வருகின்றார்கள் அல்லவா?

இதுதான் திட்டமிட்ட பயணம்.

பவர் ஸ்டார் விசாரிக்க சென்றிருக்கின்றாரா? மாண்புமிகு முதல்வர் நலம்பெற்று திரும்பிய பின் தெரியும் செய்தி.


பின்னூட்டமொன்றை இடுக