ஜல்லிக்கட்டு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேனகா மனு…. இன்னும் பிற ..

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பாஜக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

இந்திரா காந்தி ஏன் இவரை விலக்கி வைத்திருந்தார் என்பது இப்போது புரியும்

அம்மா தமிழிசை, அய்யா பொன்னார் இதோ உங்கள் கட்சிக்காரரே தடை வாங்க சென்றிருக்கின்றாரே, இதனை பற்றி உங்கள் கருத்து?

இது மேனகாவின் சொந்த விஷயம் என்றுமட்டும் வழக்கம் போல சொல்லிவிடாதீர்கள்..


மேனகா காந்தியினை அனுமதிக்கும் பாஜக , தமிழகத்தில் ரத்த களறி ஏற்பட மறைமுக சிக்னல் கொடுக்கின்றது

இது பச்சை குழந்தைக்கும் புரியும் அரசியல், தமிழ்நாட்டினை ஒரு வழியாக்க முடிவு செய்துவிட்டார்கள்.

நெருப்பு அணையும் நேரத்தில் பெட்ரோலை ஊற்றுவது நிச்சயம் ஏற்றுகொள்ளமுடியாதது, இதன் விளைவுகள் விபரீதமானவை


இந்திய குடியரசு நாளை கொண்டாட இந்தியர்களை தமிழகத்தில் ஓட ஓட அடிக்கின்றது இந்தியா என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு எவ்வளவு பெருமையான விஷயம்?

இனி எந்த மூஞ்சினை வைத்து கொண்டு உலக நாடுகளிடம் ஜனநாயகம் பற்றி பேசுவீர்கள் மிஸ்டர் மோடி


இன்று ஜெயாடிவி எப்படி செய்திகள் வெளியிடுமோ தெரியாது, ஆனால் அவர்கள் இப்படி வாசித்தாலும் வாசிப்பார்கள்

“ஆளுநர் உரைக்கு சின்னம்மா நன்றி தெரிவித்தார் , பதிலுக்கு ஆளுநர் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

சட்டசபையும், முதல்வரும் எதற்கு?, சரி சின்னம்மா எந்த தொகுதி சமஉ?

சின்ன அம்மாவின் வெண்டுகோளுக்கு இணங்க காவல்துறை தடியடி நடத்தியது, மக்களும் சின்ன அம்மா கோரிக்கைக்கு இணங்க அடிவாங்கி சென்றனர்

அடிவாங்கியவர்கள் திரும்ப வந்து, எங்களை கொல்லாமல் விட்ட சின்னம்மா வாழ்க., அதனால் அவர் முதல்வராக வேண்டும் என சொல்லியவண்ணமே இருந்தனர்

இதன் மூலம் தமிழமெங்கும் சின்னம்மாவிற்கான ஆதரவு பலமடங்கு அதிகரித்துள்ளது, இன்னும் ஆதரவினை திரட்டும் விதமாக காவல்துறை கடுமையான அடிதடியில் இறங்கியுள்ளது

இப்படி தமிழகத்தில் அமைதியினை திருப்பிய சின்னம்மாவினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்”


பின்னூட்டமொன்றை இடுக