நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடி கொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம்

நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடிகொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம்

ஈழதமிழரை விட பெரும் சிக்கலான இனம் குர்து, ஈழத்தின் எதிரி சிங்களம், கொஞ்சம் ராஜதந்திரமாக முயற்சித்திருந்தால் ஈழம் என்றோ தன்னாட்சி பிரதேசமாக மாறியிருக்கும், புலிகளின் பிடிவாதம் அதனை அழித்தது, புலிகளும் அழிந்தனர்

ஆனால் குர்து இனம் மூன்று நாடுகள் சந்திக்கும் முச்சந்தியில் சிக்கியது, சிரியா, துருக்கு, ஈராக் என முன்று நாடுகளை அவர்கள் சமாளிக்க வேண்டும்

குர்து போராளிகள் இந்த மூன்றுநாடுகளுடனும் தீரா யுத்தம் நடத்தினார்கள், சதாம் அவர்களை அடக்கிய கொடூரங்கள் ரணகளமானவை

இன்று ஈராக்கில் அவர்கள் சுயாட்சியாக அறிவித்தாகிவிட்டது, சிரியா இடியாப்ப சிக்கலில் தவிக்க அங்கும் இனி குர்துகளின் விடுதலை சாத்தியமே, துருக்கியிலும் அவர்கள் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்க ஆரம்பித்தாயிற்று

காரணம் ஐஎஸ் எனும் பெரும் அரக்க பூதத்தினை அசால்டாக குர்துபோராளிகள்தான் சமாளித்து நிற்கின்றனர். அந்த கொடூர இயக்கத்தை எதிர்த்து உலகமே கலங்கி நிற்க , அசால்ட்டாக சமாளித்து ஆச்சரியத்தை கொடுத்தது குர்து போராளிகளே

இதனால் இனி துருக்கியினை மட்டும் சமாளித்தால் குர்திஸ்தான் எனப்படும் குர்துகளின் நாடு விரைவில் உருவாகலாம் என சில கணிப்புகள் தோன்றுகின்றன‌

இதனைத்தான் எரிக் சொல்ஹிம் சொன்னார், நாங்கள் சொன்னபடி சில முடிவுகளுக்கு புலிகள் சம்மதித்திருந்தால் இன்று குர்துகள் போல தொடர்ந்து போராடிகொண்டிருப்பார்கள் என்கின்றார்

அது உண்மையும் கூட‌

குர்து போராட்டம் அப்படி காலத்தை அறிந்து போராடியதால் இன்று வெற்றிக்கு அருகில் இருக்கின்றார்கள்

தன்னாட்சிதான் ஆனால் அது வருங்காலத்தில் தனிநாடாகும் ஆரம்பம் என ஏற்றுகொண்ட பாலஸ்தீனம் இன்றும் போராட்டத்தை தொடர்கின்றது

ஆனால் புலிகள் மட்டும் நாசமாய் போனார்கள்

குர்துகளும், பாலஸ்தீனியரும் தொடரும் போராட்டம் புலிகளால் மட்டும் தொடரமுடியாமல் அழிந்து போனது ஏன்?

அதற்கு ஒரே காரணம் புலிகளின் வறட்டு பிடிவாதமும், எல்லோரையும் சந்தேகமாக பார்த்த குருட்டு திமிரும். அதனால்தான் எத்தனையோ பேர் செய்த உயிர்தியாகங்கள் வீணாயின.

1987ல் ராஜிவ்காந்தி இந்த சுயாட்சிக்குத்தான் பாடுபட்டார், அவரை போல பலர் பேசிபார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடினர், அவர்களில் எரிக்சோல்ஹிமும் இருவர்..

இன்று எரிக்சோல்ஹிம் அதனைத்தான் வருத்தத்தோடு சொல்கின்றார்

நாளை குர்திஸ்தானோ, பாலஸ்தீனமோ மலரும்பொழுது உலகம் இப்படித்தான் சொல்லும்

அது இருக்கட்டும்

எரிக்சோல்ஹிம் தமிழ்நாட்டு அரசியலில் இருந்தால் எப்படி அழைக்கபடுவார்?

தமிழின துரோகி, கலைஞரின் கூட்டாளி, சோனியாவின் அடியாள் எரிக்சோல்ஹிம் ஒழிக…

அவர் இந்திய அரசியலில் இல்லாததால் அவருக்கு அங்கிள் சைமன், திருமுருகன் காந்தி போன்றோரால் சிக்கல் இல்லை..

இன்னொன்று நார்வேகாரானை எல்லாம், ஐரோப்பியனை எல்லாம் இந்த திருட்டு முருகனும், சீமானும் திட்டமாட்டார்கள்

திட்டினால் எப்படி யூரோ வரும், வராது

அதனால் தம்பிடி வ்ருமானத்திற்கு வழியில்லாத‌ இல்லாத இந்திய அரசினையும், கலைஞரையும் திட்டிகொண்டே இருக்கலாம்

 
 
 

பின்னூட்டமொன்றை இடுக