இளநீர் திருவிழா நடத்தும் சீமான்…

Image may contain: 1 person, text

அந்நிய குளிர்பானங்களை புறக்கணிக்க அன்னார் இளநீர் திருவிழா நடத்துகின்றாராம்

தமிழக அரசு டாஸ்மாக் என்றொரு பான கடை வைத்திருக்கின்றதே, அது என்ன இயற்கை பொருளா?

தமிழகத்தின் எல்லா மதுகடை முன்னும் சென்று அன்னார் இளநீர் திருவிழா நடத்துவாரா என்றால் இல்லை

சரி முன்பு கள் தமிழரின் தேசியபானம் என்றார் அல்லவா?, அப்படி மதுக்கடை முன் கள் திருவிழா நடத்துவாரா என்றாலும் இல்லை.

முன்புதான் வந்தேறிகள் ஆட்சியில் மது ஆறாக ஓடியது, இந்த பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியிலுமா ஓடுவது என அங்கிள் சீறினால் என்ன?

அதனை எல்லாம் செய்யமாட்டார்..

மாறாக இயற்கை பானங்களை குடிப்போம் , அந்நிய பானங்களை புறக்கணிப்போம் என கிளம்புகின்றாராம்

அந்த அந்நிய பானங்களின் தமிழக டீலர்கள் யார்?, வைகுண்ட ராஜன் போன்றவர்களுக்கு அந்த தொழில் உண்டு அல்லவா என்றேல்லாம் அன்னாரை யாரும் கேட்க கூடாது

அந்நிய குளிர்பானத்தை விற்கும் தமிழனை அங்கிள் கண்டுகொள்ளமாட்டார், மாறாக எங்காவது மூலையில் இளநீர், கரும்புசாறு என குட்டிகரணம் அடிப்பார்

5 கோடி பேரை திரட்டி ஈழத்தை மீட்க கிளம்பிய அங்கிள், பின் 50 ஆயிடம் பேரை திரட்டி கச்சதீவை மீட்கும் அளவுக்கு பின்வாங்கி

இப்பொழுது 500 பேருடன் இளநீரை மீட்க கிளம்பிவிட்டார்

நாளை 5 பேருடன் எதை மீட்பாரோ தெரியாது..

ஆர்.கே நகரில் “நாம் தமிழர்கள், ஊழலை எதிர்ப்போம் தமிழகத்தை காப்போம், தினகரன் வென்றால் முதல்வாகிவிடுவார் என் சொந்தங்களே…” என அங்கிள் தினகரனை எதிர்த்து வீரமாக முழங்குவார் என எதிர்பார்த்தால்..

தமிழக அரசு மன்னார்குடி கும்பலிடம் நேரடியாக தினகரன் முதல்வராகி சிக்கிவிடும் சூழலில் இவர் ஏதாவது சொல்வார், தொண்டை கிழிய கத்துவார் என நோக்கினால்..

அவரோ எங்கோ ஹாயாக இளநீர் குடிக்க போகின்றாராம்….

நன்றாக இளநீராக குடிக்கட்டும், வயிறு நிரம்பட்டும், சிறுநீரகம் அதன் வேலையினை செய்யட்டும்

அதன் பின் ஆர்.கே நகர் தேர்தல் முடிவு அறிவிக்கபடும்பொழுது இவர் எங்கிருப்பார் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்…

 

பின்னூட்டமொன்றை இடுக