நல்ல பக்திமான் மனதில் இருக்கும் வரிகளே வார்த்தையில் வரும், அது ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது
அவரின் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் நல்ல ஆன்மீகவாதி என்பதை அவர் எதிரியும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் தன் ஆன்மீக வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ, ஆன்மீக வாழ்வு நல்ல ஆன்மீகவாதிகளால் எப்படி பரிசுத்தமாக பின்பற்றபடுகின்றதோ
அப்படி தன் அரசியலும் தன் தெய்வீக வழிபாடு போல இருக்கும், இருக்கவேண்டும் என ஆசைபடுகின்றார் ரஜினி
ஒரு சில போலிகளை கண்டு எல்லோரின் ஆன்மீகமும் இப்படித்தான் என முடிவு செய்ய முடியுமா? முடியாது
தான் வணங்கும் கடவுள் போலவே மனதிற்கு பயந்து அரசியலிலும் பாடுபடுவேன் என அவர் சொல்லியிருப்பதுதான் பொருள்
இது ஒழுங்காக கோயிலுக்கு செல்பவன், கடவுளுக்கும் மனசாட்சிக்கும் அஞ்சுபவனுக்கு புரியும்
இது புரியாதவன் எல்லாம் எதற்கு அஞ்சாத , எந்த பாவத்திற்கும் பழிக்கும் அஞ்சாதவன் என்பதே பொருள், அவனே ஆன்மீக அரசியல் என ரஜினி சொன்னதன் அர்த்தம் புரியாமல் புலம்பிகொண்டிருக்கின்றான்