ஆஸ்கர் விருதுக்கும், ஆஸ்கர் ரவிசந்திரன் விருதுக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா?
அப்படித்தான் யுனெஸ்கோ விருது என ஒன்றை யுனெஸ்கோ மன்றத்து விருது என கொடுத்து வீரமணிக்கு ஒரு காலத்தில் விபூதி அடித்திருக்கின்றார்கள்
ஆம் அந்த விருதை வழங்கியவர் கலைஞர்தான்.
கலைஞர் சமாதியில் அடித்து புரண்டு நியாயம் கேட்க வேண்டிய வீரமணி வழக்கம் போல் பிராமண சூது என கிளம்பிவிட்டார்
வீரமணியின் சட்டையினை பிடித்து “எந்த பிராமணன் உன்னை யுனெஸ்கோ விருது என ஏமாற்றினான்? சூத்திரந்தான் உன்னை ஏமாற்றினான்” என கேட்க இங்கு ஒரு பிராமணரும் இல்லை
வீரமணிக்கு கலைஞர் விபூதி அடித்தது இருக்கட்டும்
கொஞ்ச நாளைக்கு முன்பு கலைஞருக்கு ஆஸ்திரிய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது என ஒருவர் வந்தார், ஸ்டாம்போடு கலைஞரை எல்லாம் சந்தித்தார்
விரைவில் ஸ்டாம்ப் கதை வெளிவரும் என்கின்றார்கள்
நமக்கு அடுத்த சுவாரஸ்ய தருணம் காத்திருக்கின்றது
எதையும் நம்பாதே, உன் சொந்த அறிவில் யோசி என சொன்ன பெரியாரின் வாரிசுகள் எப்படி எல்லாம் யோசிக்காமல் சிக்கி இருக்கின்றன?
யோசிக்க கொஞ்சமேனும் அறிவு வேண்டும் என்பதையும் பெரியாரா சொல்வார்?
அறிவு இருந்தால்தானே யோசிக்க?