இன்று வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவு நாளாம், நல்ல வேளையாக அவன் இன்று இல்லை
கட்டபொம்மன் இன்று இருந்து நாட்டுபற்றோடு வசனம் பேசினால் அவன் பெயர் “சங்கி”
கட்டபொம்மன் இன்று இருந்தாலும் அவன் பெரியார் அண்ணா கலைஞர் வழியில் சமூக நீதிக்கு என்ன செய்தான் என்றுதான் கேட்பார்கள்,
அடேய் நீ வந்தேறி வடுகன் என கண்களை உருட்டும் ஒரு கோஷ்டி.
ஒரு கோஷ்டி தமிழனுக்கு என்ன செய்தாய் என அவன் மீசையினை இழுக்கும்,
இன்னொரு கோஷ்டி தலித் உரிமை காத்தாயா? அரசு உன்னுடையதா? நிலமெல்லாம் உன்னுடையதா? என அவன் வேட்டியினை இழுக்கும்
கட்டபொம்மன் தானாகவே தூக்குமாட்டி செத்திருப்பான்
நல்ல வேளையாக அவன் இப்போது இல்லை, முன்பே பிறந்ததால் மாவீரனாய் நிலைத்து விட்டான்