கூடங்குள அணுவுலையின் பெருந்தேவைக்கு நிலத்தடி நீர் பயன்படுவது குறித்து வேதனை பட்டிருக்கின்றார் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை
ஆம், கூடங்குள அணுவுலை என்பது பக்ரா நங்கலையே திறந்துவிட்டாலும் போதாத அளவு தேவையுடையது, இந்நிலையில் 3ம் மற்றும் 4ம் அணுவுலை கட்டுகின்றார்கள்
முன்பு பேச்சிபாறை அணையில் இருந்து நீர் கொண்டு செல்ல திட்டமிடபட்டது குமரி மக்கள் எதிர்ப்பால் அது கைவிடபட்டு தாமிரபரணியினை திருப்ப முயற்சித்து அதுவும் தோல்வி
பின் கடல்நீரை சுத்திகரிக்க போகின்றோம் என கிளம்பினார்கள், இப்பொழுது கடலில் நீர் இல்லாததால் நிலத்தடி நீரை அள்ள தொடங்கிவிட்டார்கள்
இதில் பெரும்பாலும் தனியார் கான்ட்ராக்டர்களே பெரும் பொர்வெல் அமைத்து நீரை வாருகின்றார்கள்
பொதுவாக ராதாபுரம் பூமி நிலத்தடி நீரை மட்டும் நம்பும் பூமி, அங்கு நல்ல அணையினை கட்டுங்கள் என்றால் அரசியல்வாதிகள் கோஷ்டியுடன் குளிக்க நீச்சல் குளம் அளவுக்கு அணைகட்டுவார்கள்
அதை வெற்றிகரமாக மழை வந்ததும் திறப்பார்கள், ஆனால் மூடும் நாளை சொல்லமாட்டார்கள் காரணம் திறந்த அன்று இரவே அணை காலி
அப்படிபட்ட பூமி அது
அந்த பூமியில் இன்பதுரை இந்த நீர் திருட்டை பார்த்து இதனால் அக்கம் பக்கம் விவசாயிகள் கதறுவதை கண்டு வேதனைபடுகின்றார்
நாமும் ராதாபுரம் தொகுதி முழுக்க மினரல் வாட்டர் வியாபாரிகளும், பள்ளி முதலாளிகள் நீச்சல் குளம் பூங்காவுக்காக
பல இடங்களில் நிலத்தடி நீரை திருடுவதை சுட்டி காட்டலாம்
அவர் இன்னும் அதிக வேதனைபடுவார் பாவம், அதனால் சொல்லவேண்டாம்