Self Balancing Scooter

இந்தியா இப்பொழுது வேகமாக உலகளாவிய வசதிகளுக்கு மாறிவருகின்றது , அப்படி போலிசாருக்கு “Self Balancing Scooter” எனப்படும் இரு சக்கர வாகனம் வழங்கபட்டிருக்கின்றது

இது சாலையோரங்களிலும் ரயில் நிலையம் போன்றவற்றிலும் பயன்படுமாம், நடப்பதற்கு பதில் விரைவாக செல்லுமாம்

இதில் உயரதிகாரிகளுக்கு காய்கறி வாங்கவும், டீ சிகரெட் வாங்கவும் நம்ம ஊர் காவலர்கள் பயணிப்பார்களா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை, அதெல்லாம் கேட்க கூடாது

இவ்வாகனம் ரயில் நிலையத்தினுள்ளும் விமான நிலையத்துள்ளும் சரி, மற்ற இடங்களில் இவைகளில் பயணிக்கும் அளவா சாலை தரம் இருக்கின்றது?

ஒவ்வொரு பள்ளத்திலும் இறங்கி இதை சுமந்து மறுபடி பயணித்து மறுபடி பயணிப்பதற்குள் போலிசாரின் வயிறு கரைந்துவிடாதா?

ஒருவேளை தமிழ்நாட்டு காவல்துறையின் திட்டம் அதுவாகத்தான் இருக்குமோ என்னமோ?

பின்னூட்டமொன்றை இடுக