இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது. கோத்தபாய இந்தியா வந்ததை பாகிஸ்தான் விரும்பவில்லை அல்லது இலங்கை தன் ஆட்டத்தை ரகசியமாக ஆடுகின்றது

நேற்று இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர் கோத்தபாயாவினை பார்த்து “நாம் எப்படி எல்லாம் பழகினோம், ஆனால் நீர் மோடியோடு சப்பாத்தி சாப்பிட போயிருக்கின்றீர், எம்மோடு டீ குடுக்க வரகூடாதா” என்பது போல் அழைப்பு விடுத்திருக்கின்றார்

ஆம் பாகிஸ்தான் கோத்தபாயாவினை பாகிஸ்தானுக்கு வர அழைக்கின்றது, கோத்தபாய உடனே ஓடினால் இது அவர்களின் கூட்டு சதி என பொருள், தயங்கினால் மோடி முறைத்துகொண்டிருக்கின்றார் என பொருள்

பார்க்கலாம், கோத்தபாய இருவரில் யாரை கடுப்பேற்ற போகின்றார் என்பது விரைவில் தெரியும்

பின்னூட்டமொன்றை இடுக