சற்றே நல்மனம் கொள்வாய் மார்க்கனே..

ஏ மார்க்கனே நீ நல்லவன், உலகம் வாழ் மக்கள் உய்ய இந்த முகநூலை கொடுத்திருக்கின்றாய்

ஆனால் மகா நல்லவனான நீ இந்த திராவிட கும்பல் பேச்சினை கேட்கலாமா? இவர்கள் சகுனியினை விட மோசமானவர்கள், மந்தாரையின் அவதாரங்கள்

அதனால் இந்த கோஷ்டியின் புகாரினை கிழித்தெரிந்து எம் தடையினை மீட்டால் நீ வாழ்வாய், உன் சுற்றம் வாழும் வருங்காலத்தின் உன் முகநூல் செவ்வாய்கிரகம் வரை செல்லும்

மார்க்கனே யோசித்துபார், நாம் இஸ்ரேலை எப்படி எல்லாம் கிழிக்கின்றோம் ஆனால் ஒரு பயல் புகார் கொடுக்கின்றானா?

சீனா கொடுக்கின்றதா இல்லை இம்ரான்கான் கொடுக்கின்றானா இல்லை ஈழத்து ராவணன் ராஜபக்சேதான் புகார் கொடுக்கின்றானா?

அட அந்த டிரம்பும் ஈரானியனும் கொடுக்கின்றானா?

சுந்தர்.சி என்பவர்தான் வந்து மிரட்டினாரா?

இல்லை, மாறாக இந்த வெற்று டம்மி கோஷ்டி கொடுக்கும் புகாரை எல்லாம் கணக்கில் எடுத்தால் என்னாகும்

நீ நல்லவன் என்பதால் உன்னிடம் மட்டும் ஒரு ரகசியம் சொல்கின்றேன், நீயாக திருந்தி எம் தடை நீக்கிவிட்டால் உனக்கு நல்லது, இல்லையேல் இந்தியாவில் இருந்தே உன் முகநூல் விரட்டபடும்

ஏ நல்லவனே. நீ இந்த ராமர் பக்கம் இருந்தால் வாழ்வாய், மாறாக அந்த அரக்க கூட்டம் பக்கம் சென்றால் அழிவாய், அவர்களுக்கு அழித்தேதான் வழக்கம்

காதை கொண்டுவா ஒரு ரகசியம் சொல்கின்றேன், அந்த கோஷ்டியினை நம்பிய யாரும் வாழ்ந்தது கிடையாது, வாழ விடமாட்டார்கள்

அந்த ஆபத்தை களையே இப்பொழுதே எம் தடை தீர்ப்பாய், கடை விரிக்க வழிதிறப்பாய் என் செல்லமே

சற்றே நல்மனம் கொள்வாய் மார்க்கனே..

பின்னூட்டமொன்றை இடுக