காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம்.

இந்த காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம் சிலருக்கு கண்ணீர் அழுகை

அதில் திருமாவும் பா.ரஞ்சித் என்பவரும் முக்கியமானவர்கள்

அதாவது இவர்கள் தொழிலே மேல்சாதி என எதையாவது சொல்லி, இந்துமதத்தை சீண்டிகொண்டே இருப்பது என்பதால் அப்படித்தான் சொல்வார்கள்.

டிரைலர் நிறுத்தபட்டது ஆதிக்கசாதியின் வெறி என்கின்றது இந்த கோஷ்டி

கவனியுங்கள்

குடியரசு தலைவர் ஒரு தலித், தமிழக சபாநாயகர் ஒரு தலித், தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு தாழ்த்தபட்ட சாதி, ஸ்டாலினின் பலம்வாய்ந்த கூட்டாளி திருமா தலித்

ஸ்டாலினுக்கு பெரும் அடித்தளம் அமைத்த 60 வருடம் தமிழக அரசியலை ஆட்டி வைத்த கருணாநிதி ஒரு தலித்

திமுகவின் பலம் வாய்ந்த கனிமொழி தலித், ஆ.ராசா தலித்

மீடியாவில் கோலோச்சும் சன்டிவியின் கலாநிதிமாறன் வரை யார்? தலித் வம்சம், மறுக்க முடியுமா?

இது போக பாஜகவின் மாநில தலைவர் முதல் ஏகபட்ட தலித்துக்கள் மேல் மட்டத்தில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர்

இது போக ஏகபட்ட சட்டங்களும் இப்பொழுது அவர்களுக்கே சாதகம்

கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு என ஆதிக்கம் செலுத்தும் சாதி எது?

உயர்சாதியா? மற்ற சாதியா? எது ஆதிக்கம் செலுத்தும் சாதி?

ஆக இப்பொழுது ஆதிக்க சாதி யாரென்றால் சாட்சாத் இவர்கள்தான்

ஆம், “பார்ப்பபானை ஏ பார்ப்பானிய பயலே, ஆரியனே, பூனூலே..” என கண்டபடி திட்டலாம், சட்டம் பார்த்துவிட்டு “ஓ அவர்களையா திட்டட்டும், அவர்களை சாதிபெயர் சொல்லி திட்டினால் தண்டிக்க இடமில்லை” என அதன் போக்கில் இருக்கும்

ஆனால் வேறு சாதிகள் பெயரை உச்சரித்தாலோ , தொழிலை சொன்னாலோ சட்டம் இரும்புகரமாய் பாயும், கொடும் வழக்கு பாயும்

ஆக யாருக்கு இருக்கின்றது பாதுகாப்பு? யாருக்கு இருக்கின்றது ஆதிக்கம்? எது ஆதிக்க சாதி?

தாங்கள்தான் ஆதிக்க சாதி என தெரியாமல் இப்பொழுதும் வேறு யாரையோ கைகாட்டி அவர்கள்தான் ஆதிக்கசாதி என சொல்பவர்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகின்றது

அய்யன்மீர்… இப்பொழுது ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க சாதி நீங்கள்தான், அதை முதலில் உணருங்கள்

பின்னூட்டமொன்றை இடுக