மத்திய அரசை வாழ்த்துகின்றோம்.

கொரோனா காலத்தில் தன் மகளின் படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை மக்களுக்கு செலவிட்ட மதுரை மோகன் என்பவரை முன்பே மோடி பாராட்டியிருந்தது குறிப்பிடதக்கது.

இப்பொழுது அவரை இன்னும் கவுரவத்திருக்கின்றது அரசு

அதாவது மோகனை அழைத்து கட்சியில் சேர்க்கவில்லை, ஒன்றிய தலைவர் பதவி கொடுக்கபடவில்லை அது அரசியல்

அதை விட பெரும் கவுரவத்தை செய்திருக்கின்றது மத்திய அரசு.

ஆம் எந்த மகளுக்காக சேர்த்துவைத்த பணத்தை மோகன் மக்களுக்கு செலவிட்டாரோ, அதனால் எந்த மகளுக்காக கலங்கி நின்றாரோ அந்த மகளை ஐ.நாவுகான நல்லெண்ண தூதராக அறிவித்திருக்கின்றது இந்திய அரசு

இது வாழ்த்துகுரிய விஷயம், தேசத்துக்காக தன்னலமற்று உழைக்கும் யாரையும் தேசம் கைவிடாது எனும் மிகபெரிய நம்பிக்கை

மத்திய அரசை வாழ்த்துகின்றோம்

படித்து நாட்டிற்காக பணியாற்ற வேண்டிய அந்த பெண், இனி ஐ.நா நல்லெண்ண தூதராக பணியாற்றி மென்மேலும் பெரும் கல்வி பெற்று உயர்ந்து நாட்டுபணியாற்ற நாமும் வாழ்த்துவோம்.

ஒரு நல்ல தலைவன் மாபெரும் நல் வழிகாட்டுவான், மிக பெரும் உற்சாகத்தை தேசத்துக்கு கொடுப்பான் என்பது இதுதான்

மதுரையின் ஏழை சிறுமியினை அப்படி அந்த நல்ல தலைவன் உலகறிய செய்திருகின்றான்.

நாமும் அக்கட்சியினை கவனிக்கின்றோம், இன்று உத்திர பிரதேச முதல்வர் யோகிக்கு பிறந்த நாள் அவருக்கு வாழ்த்துக்கள்

யார் யோகி?

பணமும், படிப்பும், பெரும் பின்புலமுமற்ற வெறும் ஆண்டி பண்டாரம். ஆனால் தேசம் நலம்பெற வேண்டும் என விரும்பும் ஆண்டி

அவனுக்கு திருவோடு கூட இல்லை, காவி உடை தவிர ஆடையுமில்லை ஆனால் நாடுவாழ ஆசை மட்டும் இருந்தது

அவரை மாநில முதல்வராக அமரவைத்த கட்சி அது, தாழ்த்தபட்ட ஒருவரை குடியரசு தலைவராக வைத்திருக்கும் கட்சியும் அது

அடிமட்டத்தில் கிடக்கும் ஒருவனின் நாட்டுபற்றையும் அவனின் உழைப்பையும் கண்டு கைதூக்கி உயர மின்னும் வாய்ப்பளிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே

அதை மறுக்க யாராலும் முடியாது. அந்த தன்மை ஒன்றாலே ஆலமரமாய் நிற்கின்றது அக்கட்சி.

பின்னூட்டமொன்றை இடுக